அதிரை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த விவசாயி பலி-சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் விபத்து

Posted September 14, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு கிராமத்தை சேர்ந்த சுந்தரம்பிள்ளை மகன் சீசர் (வயது 46). விவசாயி. இவர், சம்பவத்தன்று இரவு துவரங்குறிச்சியில் இருந்து செங்கப்படுத்தான்காட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். செங்கப்படுத்தான்காடு அருகே சென்றபோது சாலையின் குறுக்கே ஒரு நாய் ஓடியதால் சீசர் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான சீசர் உடல் பிரேத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


0 comment(s) to... “அதிரை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த விவசாயி பலி-சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் விபத்து”