900 கிலோ மைசூர்பாகுவில் தயாராகும் விநாயகர் சிலை

Posted September 13, 2015 by Adiraivanavil in Labels:
சென்னை தியாகராயநகரில் 900 கிலோ மைசூர் பாகுவில் விநாயகர் சிலையை இந்து முன்னணி அமைத்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறுவிதமான விநாயகர் சிலைகள் சென்னை நகரின் முக்கிய இடங்களில் வைக்கப்பட உள்ளன. இந்து முன்னணி அமைப்பின் (தியாகராயர் நகர் கிளை) விநாயகர் சதுர்த்தி விழாக்குழு சார்பில் 900 கிலோ மைசூர் பாகினால் விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது.

12 அடி உயர சிலை

இந்த விநாயகர் சிலை வெங்கடநாராயண சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகில் வைக்கப்பட உள்ளது. இதுகுறித்து விநாயகர் சதுர்த்தி விழாக்குழு பொதுச்செயலாளர் குட்டி கணேஷ் கூறும்போது, ‘இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையும், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளும் ஒரே நாளில் வருகிறது. இதை இரட்டிப்பாக கொண்டாடும் விதமாக 900 கிலோ மைசூர் பாகுவினால் சிலையை அமைத்து வருகிறோம். இந்த விநாயகர் சிலை 12 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது.’ என்றார்.


0 comment(s) to... “900 கிலோ மைசூர்பாகுவில் தயாராகும் விநாயகர் சிலை”