முத்துப்பேட்டை அருகே அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி.

Posted September 20, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை அடுத்த மாங்குடி கள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மனைவி விசாலாட்சி(60). இவர் நேற்று உடல் நிலை சரி இல்லாததால் நாச்சிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவிட்டு ஊருக்கு திரும்ப முத்துப்பேட்டையிலிருந்து நாகப்பட்டினம் சென்ற அரசு பேருந்தில் ஏரி சென்றார். எடையூர் சங்கேந்தி கடைத் தெரு பஸ் நிறுத்தத்தில் இறங்கும் போது நிலை தடுமாறி விசாலாட்சி விழுந்தார். அப்பொழுது அரசு பேருந்தின் பின் சக்கரம் விசாலாட்சியின் இரு கால்கள் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த விசாலாட்சியை அப்பகுதியினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விசாலாட்சி இறந்தார். இது குறித்து எடையூர் சப்-இன்ஸ்பெக்டர் வேதமூர்த்தி வழக்கு பதிவு செய்து டிரைவர் பரமசிவத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி.”