கூலி தொழிலாளியின் ஸ்கேன் ரிப்போர்டில் வித்தியாசமான உருவம்! அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் முத்துப்பேட்டை தர்காவில் தஞ்சம்

Posted September 07, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை தர்காவிற்கு வந்த கூலி தொழிலாளி ஒருவரின் வயிற்றில் எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்டில் வித்தியாசமான உருவம் தெரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையன் மகன் கணேசன்(45). கூலி தொழிலாளியான இவருக்கு 15 தினங்களுக்கு முன்பு தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கணேசன் முதலில் உள்ளுர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றவர் வயிற்று வலி தீராததால் தஞ்சாவூர் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். முதலில் அவரை பரிசோதித்த டாக்டர் அவருக்கு சிகிச்சை அளித்துவிட்டு ஒன்றுமில்லை என்று திருப்பி அனுப்பி உள்ளார். திரும்பவும் கணேசனுக்கு வயிற்று வலி அதிகரித்தால் மீண்டும் அதே மருத்துவ மனையில் கடந்த வாரம் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கு டாக்டர்கள் கணேசன் வயிற்றில் ஸ்கேன் எடுத்து பார்த்து ஆப்ரேசன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். வயிற்று வலிக்கு ஆப்ரேசனா? என்று சந்தேகம் அடைந்த கணேசன் மற்றும் குடும்பத்தினர். டாக்டரின் ஸ்கேன் படத்தை பார்த்தனர். அதில் மண்டை ஓடு, டைனோசர், நெருப்பு கோழி போன்ற பயங்கரவித்தியாசமான உருவங்கள் தெரிந்ததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ஆப்ரேசன் வேண்டாமென்று மறுத்துவிட்டு மருத்துவ மனையிலிருந்த வெளியேறினர். இந்த நிலையில் ஸ்கேன் ரிப்போர்ட் படத்தில் உள்ள உருவங்களை பார்க்கும் போது பேயாக இருக்குமோ? என்று நினைத்த கணேசனின் குடும்பத்தினர் நேற்று காலை கணேசனை அழைத்துக் கொண்டு முத்துப்பேட்டை தர்காவிற்கு வந்தனர். பின்னர் கணேசனை ஆண்டவர் சமாதி முன்பு வைத்து தர்கா டிரஸ்டிகள் பத்தி கொளுத்தி சாம்பிரானி போட்டு நீண்ட நேரம் துஆ ஓதினர். பின்னர் கணேசனும் அவரது குடும்பத்தினரும் தர்காவில் வயிற்று வலி தீரும் வரை தங்கி உள்ளனர். கூலி தொழிலாளி ஒருவரது வயிற்றில் எடுக்கப்பட்ட ஸ்கேன் படத்தில் பேய் உருவம் தெரிவதாக செய்தி முத்துப்பேட்டை பகுதியில் பரவியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

படம் செய்தி: நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை







0 comment(s) to... “கூலி தொழிலாளியின் ஸ்கேன் ரிப்போர்டில் வித்தியாசமான உருவம்! அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் முத்துப்பேட்டை தர்காவில் தஞ்சம்”