முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியை பேரூராட்சி துணைத் தலைவர் அப்துல் வகாப் துவக்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே தஞ்சாவூர் கம்பன் கலை குழுவினர் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. மேலும் மழை நீர் சேகரிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்தும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சேவியர், ரெத்தினக்குமார், ஜெய்புநிஷா பகுருதீன், தம்பி மரைக்காயர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுல்தான் இபுராஹிம், ஆசிரியர்கள் ஆண்டனி, செல்வசிதம்பரம் மற்றும் ஆசிரியைகள் பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.
படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை