பெட்ரோல் -டீசல் விலை குறைந்தது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

Posted September 01, 2015 by Adiraivanavil in Labels:
புதுடெல்லி - பெட்ரோல்,டீசல் விலை குறைந்தது. இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ 2ம் டீசல் லிட்டருக்கு 50காசும் குறைந்தது.சர்வதேசச்சந்தையில் எண்ணெய் விலை குறைந்ததைத்தொடர்ந்து இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததாக இந்திய ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்தது. உள்ளூர் லெவியுடன் பெட்ரோல் விலை லிட்ருக்கு ரூ 2 குறைக்கப்பட்டது.
எனவே ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 61.20ஆக குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 63.20க்கு விற்பனையானது. டீசல் விலை லிட்டருக்கு ரூ 44.45ஆக குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி டீசல் ரூ 44.95க்கு விற்பனையானது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.27ம் டீசல் விலையை லிட்டருக்கு ரூ 1.17எனவும் குறைத்தது.
சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெகுவாக குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் இதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.ரூபாய் மற்றும் அமெரிக்க டாலரின் பரிவர்த்தனை விகிதம் குறைந்துள்ளது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் எண்ணெய் விலை விகிதமும் குறைக்கப்பட்டிருக்கிறது என்று இந்திய எண்ணெய் கார்ப்பரேஷன் தெரிவித்து இருக்கிறது.


0 comment(s) to... “பெட்ரோல் -டீசல் விலை குறைந்தது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது”