அதிரை கரையூர் தெருவில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு
Posted September 17, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக
கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட
விநாயகர் சிலைகள் வருகிற 20-ந் தேதி முதல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடந்தது.அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்தபூஜைகள் உபயதாரர் மூலம் 5 நாட்கள் நடைபெறும்
1 A.முத்துவேல் நந்தினி (16-9-2015)
2 V.முருகபிள்ளை விஜயா (17-9-2015)
3 K.முத்துகிருஷ்ணன் அலமேலு (18-9-2015)
4 R.கணேசன் மூர்த்தி பத்மா (19-9-2015)
5 நாக.சேகர் நாரயணனி (20-9-2015)
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கரையூர் தெரு கிராம
பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர்
0 comment(s) to... “அதிரை கரையூர் தெருவில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு”