அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பேராவூரணியில் பிரச்சார பயணம்

Posted September 01, 2015 by Adiraivanavil in Labels:
 பேராவூரணி செப்டம்பர்-01;
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வரும் செப்டம்பர்-10 ந்தேதி அன்று வேலையின்மை, மதுவிலக்கு, கல்வி வியாபாரம், ஆணவக்கொலைகள், சாதிய ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தை நோக்கி பேரணி மற்றும் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.
         போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆகஸ்ட்-29 ந்தேதி தொடங்கி செப்டம்பர்-1,5 ஆகிய ஐந்து தினங்கள் தஞ்சை மாவட்டத்தின் திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், அம்மாப்பேட்டை, தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 
கோரிக்கை விளக்க பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது.
      பந்தநல்லூரில் நடைபெற்ற பிரச்சார பயணத்தை இளைஞர் பெருமன்ற மாவட்டச்செயலாளர் ஆர்.கே.செல்வகுமார் தலைமையில், சிபிஐ திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் டி.ஆர்.குமரப்பா துவக்கி வைத்தார். இளைஞர் பெருமன்ற மாநில பொருளாளர் மன்னை மு..பாரதி, மாநில துணைத்தலைவர் பெ.முருகேசு, மாநில துணைச்செயலாளர் யூ. சிவாஜி காந்தி, மாநிலக்குழு உறுப்பினர் துரை.அருள்ராஜன் ஆகியோர் வாழ்த்தி தொடங்கி வைத்தனர்.
     அதனொரு பகுதியாக பேராவூரணியில் செவ்வாய் அன்று நடைபெற்ற பிரச்சார இயக்க குழுவினருக்கு  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் (சிபிஐ சார்பு) பா.பாலசுந்தரம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றியச்செயலாளர் ஆர்.காசிநாதன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
       பின்னர் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்திற்கு .முகமது ரபீக் தலைமை வகித்தார். இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ஆர்.கே.செல்வகுமார், மாவட்ட துணைச்செயலாளர்கள் கோ.சக்திவேல், செ.செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் பிரபு, கோசிமின், கார்த்தி, தர்மராஜ், ஜோதிபாசு, சதாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





0 comment(s) to... “அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பேராவூரணியில் பிரச்சார பயணம்”