முத்துப்பேட்டை அருகே பா.ஜ.க பொதுக்கூட்டம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்!

Posted September 13, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கடைத்தெருவில் பா.ஜ.க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் பேட்டைசிவா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் பேசினார்கள். இதில் பாண்டி மற்றும் குன்னலூர் பகுதியை சேர்ந்த பலரும் பா.ஜ.கவில் இணைந்தனர். கூட்டத்தில் பாஜக இளைஞர் அணி நிர்வாகி தில்லை புகழ் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
படம்செய்தி நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை


முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கடைத்தெருவில் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். அருகில் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பேட்டைசிவா.


முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கடைத்தெருவில் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கட்சியில் இணைந்தவர்களுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து வரவேற்றார். அருகில் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பேட்டைசிவா.



0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே பா.ஜ.க பொதுக்கூட்டம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்!”