ஆபரேஷன் ஹம்லா போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் தீவிர சோதனை

Posted September 12, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை பகுதியில் ஆபரேஷன் ஹம்லா முன்னிட்டு நேற்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். இதில் முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உட்பட 2 டி.எஸ்.பி.கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள், 29 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 120 காவலர்கள், 40 ஆயுதபடை காவலர்கள், 25 ஊர் காவலர் படையினர் மற்றும் இளைஞர் காவல் படை, தமிழ்நாடு சிறப்பு காவலர் படை மற்றும் போக்கு வரத்து காவலர்கள், கடலோர காவல் துறையினர் ஆகியோர் இடுப்பட்டு வருகின்றனர். மேலும் பேட்டை, கோவிலூர், இடும்பாவனம், தில்லைவிளாகம், கோபால சமுத்திரம், தம்பிக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. கடலோர கிராமங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ள பகுதியிலும் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். மேலும் முத்துப்பேட்டை லகூன் பகுதியில் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் சின்னையன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன், ஏட்டு வெற்றி செல்வம் ஆகியோர் கொண்ட கடலோர போலீசார் கடலுக்கு செல்லும் மீனவர்கள் படகுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். கடலுக்கு செல்லும் மீனவர்கள் அனைவரும் உரிய ஆவணங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செல்கிறார்களா? அவர்களிடம் அடையாள அட்டை உள்ளதா? டீசல் எத்தனை லிட்டர் வைத்திருக்கிறார்கள் என ஆய்வு செய்தனர். கடலிலோ, கடற்கரை பகுதிகளிலோ புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தெரியப்படத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

படம் செய்தி:
நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை


முத்துப்பேட்டை அடுத்த பேட்டை கிராமத்தில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன,; ஏட்டு செல்வகுமார் ஆகியோர் வாகனங்களை சோதனையிட்டனர்.

முத்துப்பேட்டை லகூன் பகுதியில் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் சின்னையன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன், ஏட்டு வெற்றி செல்வம் ஆகியோர் கொண்ட கடலோர போலீசார் படகுகளில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.



0 comment(s) to... “ஆபரேஷன் ஹம்லா போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் தீவிர சோதனை”