அதிராம்பட்டினத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்-(அதிக படங்கள் இணைப்பு)
Posted September 20, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் நகர இந்து முன்னனி சார்பில் 26-ம் ஆண்டு வினாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலம் பட்டுக்கோட்டையிலிருந்து விஸ்வரூப வினாயகர் முதல்சேரி பள்ளிக்கோண்டான் சேண்டாக்கோட்டை மளியக்காடு நடுவிக்காடு புதுக்கோட்டைஉள்ளுர் வழியில் பழஞ்சூர் மழவேனிற்காடு வழியாக அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை வந்து அடைகிறது பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அதிராம்பட்டினம் இந்து முன்னணி அதிரை நகர தலைவர் பிரபாகரன், துணை தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. நகர பொதுச்செயலாளர் அருணாசலம் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சு.மாயக்கூத்தன் சிறப்புரை ஆற்றினார். இந்த ஊர்வலம் சேர்மன்வாடி பழஞ்செட்டிதெரு கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஏரிப்புறக்கரை கிராமத்துக்கு சென்று அங்கு வங்ககடலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட வினாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யபடுகிறது இந்த ஊர்வலத்தையேட்டி ஊர்வலம் அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்காக தஞ்சை மாவட்ட எஸ்;.பி தர்மராஜ் முன்னிலையில் 13 டிஎஸ் பிக்கள் 22 இன்ஸ்பெக்டர்கள் 46 சப் இன்ஸ் பெக்டர்கள் மற்றும் ஆயுதப்படையினர் ஊர்காவல்படையினர் மற்றும் உளவுத்துறை போலீஸர்கள் பாதுகாப்புபணியை மேற்கொண்டனர் ஊர்வலத்தில் முன்னும் பின்னும் போலீஸ் வாகனங்கள் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் பாதுகாப்பு பணிக்காக நகரின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தது. முக்கிய பகுதிகளின் இணைப்பு சாலைகளில் வாகன தடுப்பு தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. வண்டிப்பேட்டை, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. வஜ்ரா போலீஸ் வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியன தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் அமைதியாக ஊர்வலம் நடந்து முடிந்தது.
0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்-(அதிக படங்கள் இணைப்பு)”