ஜப்பானில் கடும் மழை: வெள்ளத்தில் மிதக்கும் வடக்கு டோக்கியோ
Posted September 11, 2015 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
இந்த வருடத்தின் 18-வது சூறாவளிக் காற்றால் கனமழை பெய்து வருகிறது. இதில் வடக்கு டோக்கியாவின் ஜோசோ நகரம் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த நகரம் அருகில் உள்ள கினுகவா ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் மக்கள் தங்களை பாதுகாக்க வீட்டின் கூரையின் மீது ஏறினர். அவர்கள் ராணுவ ஹாலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். இந்த பகுதியில் உள்ள 65 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழையினால் சில வீடுகள் மண்ணில் புதைந்தன. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டன.
இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இதுபோல் கனமழை பெய்ததில்லை என்றார்.


0 comment(s) to... “ஜப்பானில் கடும் மழை: வெள்ளத்தில் மிதக்கும் வடக்கு டோக்கியோ”