சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு முழுவெற்றி ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது தொழில் முதலீடு முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்
Posted September 10, 2015 by Adiraivanavil in Labels: தமிழகம்
சென்னை, முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கான முதலீடு ரூ.1 லட்சம் கோடியை ஏற்கனவே தாண்டிவிட்டது என்றும் மாநாட்டின் முடிவில் மேலும் இது அதிகரிக்கும்என்றும் முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் தொழில் மையத்தில் சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு உரிய நிலையை உருவாக்கி இருக்கிறோம்.ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜென்சியின் உதவியுடன் தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு களை பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. மாநிலத்தில் சமமான தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதில் எனது அரசுஉறுதியாக உள்ளது. எனவே தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தொழில் தொடங்குவதற்கு சலுகைகளை நாங்கள் அறிமுகப்படுத்தியி ருக்கிறோம். தொழில்களை உடனடியாகதுவக்குவதற்கு வசதியாக 42,000 ஏக்கர் நிலம் தயாராக உள்ளது.
தொழில் தொடங்குவதற்கு 30 நாட்களில் அனுமதி வழங்க வேண்டும் என்று நான் அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருக்கிறேன். தமிழ்நாடு திறம்படசெயல்படக் கூடிய மாநிலம் என்பதை மீண்டும் ஏற்படுத்தி இருக்கிறோம். உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான சூழ்நிலை நிலவுவதைஅங்கீகரித்துள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் 2015 வரை 2,61,709.92 கோடி அளவிலான முதலீட்டு திட்டங்களை தமிழகம் பெற்றிருப்பதாக மத்திய அரசின்பொருளாதார கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.
2011 மே முதல் 86 முதலீடு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. ஒற்றைச்சாளர முறையில் ரூ.43,101.81 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச்சிறப்புமிக்கவேளையில் ரூ.2,568 கோடி மதிப்புள்ள 3 புதயி திட்டங்களை நான் இங்கு துவக்கி வைத்து இருக்கிறேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திய யமஹா மோட்டார் நிறுவனத்தின் புதியஇருசக்கர வாகன ஆலை துவக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 18 லட்சம் வாகனங்கள் இங்கு உற்பத்தியாகும்.
தரமணியில் ரூ.1,600 கோடி மதிப்புள்ள டைசல் உயிரியல் பூங்கா-2, ஓசூரில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் விரிவாக்க பிரிவு ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளது.ரூ.800 கோடிமுதலீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.வெளிநாட்டு மூலதனங்களை ஈர்ப்பதற்கு பல்வேறு திட்டங்களை மோடி அறிவித்து இருக்கிறார். இத னால் ஈர்க்கப்பட்ட முதலீட்டாளர்கள்தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முதலீட்டு திட்டங்களுக்கு விரைவில் அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறேன்.தமிழக அரசின் 2023 தொலை நோக்கு திட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்வர வேண்டும்.ரூ.1 லட்சம் கோடி முதலீட்டை திரட்ட வேண்டும் என்ற இலக்கு ஏற்கனவே தாண்டிவிட்டது. மேலும் 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டின் மூலம் மேலும் இது அதிகரிக்கக்கூடும். அதுபற்றியஅறிவிப்பை நாளை ( இன்று ) நான் அறிவிக்கிறேன். தமிழகத்தில் முதலீடு செய்வது வலுவானது. தமிழகத்தில் மனித சக்தி வளர்ச்சிக்கு உதவிகரமாக உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவின்வளர்ச்சிக்கே இந்த மனித சக்தி உதவியுள்ளது. உலக நாடுகளில் தொழில் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றில் தங்கள் பங்களிப்பை அளித்த தமிழர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களைநான் வரவேற்கிறேன். இந்த மாநாட்டோடு 24 கருத்தரங்குகளும் நடைபெற இருக்கின்றன. பல்வேறு துறையில் முதலீடு செய்வது தொடர்பாக இந்த கருத்தரங்கு நடைபெறும். தமிழகத்தைநன்றாக அறிந்துகொள்வதற்கு இது உதவிகரமாக இருக்கும்.
உங்களுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எங்களின் அரசின் அமைச்சர்களும், அதிகாரிகளும் தெரிந்துகொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். மேலும் சிறப்பானகண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் நீங்கள் கலந்து உரையாடி தொடர்புகளை உறுதிப்படுத்தி தொழில்கள் வளர உதவிகரமாக இந்த வாய்ப்பு அமையும். தமிழக மக்களின் சார்பில் தாங்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறேன். மேலும் வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னையில் பாரம்பரியமிக்கதமிழகத்தின் முக்கிய இடங்களையும் பார்ப்பதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும். உங்களை சுற்றுலா பயணிகளாக வரவேற்கிறோம்.
எங்களோடு தங்கி, எங்களோடு கலந்து தமிழகத்தின் வளர்ச்சி என்ற பயணத்தில் எங்களோடு பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள், எங்கள்எதிர்காலத்தில் முதலீடு செய்யுங்கள். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்
0 comment(s) to... “சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு முழுவெற்றி ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது தொழில் முதலீடு முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்”