பேராவூரணி அருகே மின்னல் தாக்கியதில் மாடு பலி

Posted September 13, 2015 by Adiraivanavil in Labels:



பேராவூரணி செப்டம்பர்-13;
பேராவூரணி அருகே நெல்லியடிக்காடு கிராமத்தில் மின்னல் தாக்கியதில் மாடு பலியானது
      பின்னவாசல் கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகன் கணேசன் தனக்கு  சொந்தமான மாடுகளை நெல்லியடிக்காடு குறிஞ்சாக் குளக்கரை அருகில் 
மேய்த்துக் கொண்டிருந்தார்.
      அப்பொழுது அப்பகுதியில் திடீர் மழை பெய்தது. மின்னலுடன் இடி வெட்டியது. கணேசன் தனது மாடுகளுடன் அங்கிருந்த கொட்டகையில் ஒதுங்கினார். அப்போது திடீர் என மின்னலுடன், இடி தாக்கியதில் கணேசனின் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள காளை மாடு பலியானது. கணேசன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
        தகவல் அறிந்து வந்த வருவாய் துறை அலுவலர்கள் கணேசனை சந்தித்து விசாரித்து அறிந்தனர். சம்பவம் குறித்து கணேசன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.




0 comment(s) to... “பேராவூரணி அருகே மின்னல் தாக்கியதில் மாடு பலி”