அதிரையில் தமாகாவினர் நடத்திய கையெழுத்து இயக்க தெருமுனை பிராசாரக்கூட்டம்

Posted September 07, 2015 by Adiraivanavil in Labels:
 பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரி தமாகாவினர் தமிழகம் முழுவதும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி மாநில ஆளுநருக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் தமாகாவினர்  அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்தில்  தெருமுனை பிராசாரக்கூட்டம் நடைபெற்றது இதனையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிரை பேரூர் தலைவர் M.M.S அப்துல் கரீம் தலைமை வகித்தார். தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினர் M.M.S பஷீர் அஹமது. தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், தஞ்சை மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் தமாகாவின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் வடுவூர் கரிகாலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மதுவின் தீமை மற்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமாகா நடத்திவரும் கையெழுத்து இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.இதை தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்கூட்டத்தில் தமாகா அதிரை பேரூர் நிர்வாகிகள்  மற்றும் தமாகாவினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.







0 comment(s) to... “அதிரையில் தமாகாவினர் நடத்திய கையெழுத்து இயக்க தெருமுனை பிராசாரக்கூட்டம்”