அதிராம்பட்டிணத்தில் பணியாற்றும் சித்த மருத்துவரின் மகன் கார் விபத்தில் பலி !

Posted September 28, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம்அருகே உள்ள தாமரங்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் லண்டனில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரபாவதி அதிராம்பட்டிணத்தில் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜேஸ்வா (15) மதுரையிலுள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளிக்கு காலாண்டு விடுமுறை என்பதால், பிரபாவதி மதுரையிலிருந்து ஜேஸ்வாவை காரில் அழைத்து வந்தார். காரை பிரபாவதியே ஓட்டிவந்தார். திருச்சிற்றம்பலம் அருகே உள்ள நெடுவாசல் சோதனைச் சாவடி சாலை அருகே பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி சென்ற தனியார் பேருந்து கார் மீது மோதியது.
இதில் காரில் சென்ற பிரபாவதியும், ஜேஸ்வாவும் பலத்த காயமடைந்தனர். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜேஸ்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபாவதி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸார் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியனை (33) கைது செய்தனர்.


0 comment(s) to... “அதிராம்பட்டிணத்தில் பணியாற்றும் சித்த மருத்துவரின் மகன் கார் விபத்தில் பலி !”