அதிரை பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர். தொற்று நோய்கள் பரவி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

Posted September 13, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் சில மாதங்களுக்க முன்பு பேரூராட்சி சார்பில் பேருந்து நிலையம் சாலை இருப்பக்கமும் கழிவு நீர் வடிக்கால் கட்ட அதிரடியாக பணிகள் துவங்கியது. இரவு பகல் பாராமல் பணிகளை துவக்கிய பேரூராட்சி நிர்வாகம் என்ன காரணமோ பணியை பாதியில் நிறுத்தினர். அதனால் பணிகள் முழுமை பெறாமல் ஆங்காங்கே மட்டுமே பணிகள் நடந்து பாதியில் கிடப்பில் போடப்பட்டது. அந்த பணியை பேரூராட்சி நிர்வாகம் இது வரை செய்து முடிக்கவில்லை. அதனால் பணி நடைபெற்ற பேருந்து நிலையத்தில்  சாக்கடை நீர்கள் வடிய வழியின்றி தேங்கி நிற்கிறது.  இது குறித்து பொதுமக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் தொவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்பது ஒரு பக்கம். ஆனால் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த பணியால் தற்போது  கழிவு நீர்கள் தேங்கி வடிய வழியின்றி நிற்பது இப்பகுதியின் ஒரு கொடுமையான அவலமாக உள்ளது. மேலும் அதிரை பேரூந்து நிலையத்தில் பஸ்சில் பயணம் செய்வதற்க்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  பள்ளிவாசல்கள், கோவில்கள் பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள்,; மத்தியில் தற்பொழுது சில மாதமாக  சாக்கடை நீர் தேங்கி கொசு உற்பத்தியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் இந்த அவல நிலையால்  பேருந்து நிலையத்திற்க்கு வரும்  மக்களுக்கு அடிக்கடி பல்வேறு வியாதிகள் ஏற்பட்டு வருகிறது.  இதனை சுகாதாரத்துறையும,; பேரூராட்சி நிர்வாகமும் கண்டுக்கொள்ளவில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் வடிய வழியின்றி திறந்து கிடக்கும் இந்த சாக்கடை நீரால் நோய்கள் பரவி வருவது ஒருபுறம் இருந்தாலும் அடிக்கடி; இந்த வடிக்காலுக்குள் மக்களும் வாகனங்களும் விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். 


 அதிரை பேருந்து நிலையத்தில்  தேங்கி நிற்கும் சாக்கடை நீர்



0 comment(s) to... “அதிரை பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர். தொற்று நோய்கள் பரவி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு”