பேராவூரணியில் அண்ணா பிறந்த நாள் விழா

Posted September 15, 2015 by Adiraivanavil in Labels:
 பேராவூரணி செப்டம்பர்-15;
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 107-வது பிறந்த தின விழா பேராவூரணியில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது
      திமுக மாவட்ட துணைச்செயலாளர் என்.செல்வராஜ் தலைமையில் பயணியர் விடுதியிலிருந்து ஊர்வலமாக வந்து சேதுசாலையில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஊர்வலத்தில் பேராவூரணி பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம், பேராவூரணி ஒன்றிய பொறுப்பு செயலாளர் என்.எஸ்.சேகர், ஒன்றிய அவைத்தலைவர் நீலகண்டன், பொதுக்குழு உறுப்பினர் தனபால், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆரோ.அருள், மாவட்ட கழக உறுப்பினர்கள் வேலுச்சாமி, சந்திரபோஸ், நாகராஜ், கி.ரெ.பழனிவேலு, வா.கோட்டை பன்னீர்செல்வம், ரவி, உடையப்பன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் இள.அரசு, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முகமது பாரூக் , முத்து.தங்கப்பன், ஏலம்மாள் மற்றும் ஒன்றிய, நகர, கிளைக்கழக, இளைஞர் அணி உள்ளிட்ட பல்வேறு கட்சி அமைப்பின் நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நகரச்செயலாளர் தலைமையில் தனி அணியாக மாலை அணிவிப்பு 

நகரச்செயலாளர் தனம் கோ.நீலகண்டன் தலைமையில் தனி அணியாக திமுக நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் .பழனிவேலு, முன்னாள் ஒன்றியச் செயலாளர்கள் சுப.சேகர், இராஜரத்தினம் மற்றும் பூவாளூர் ஞானப்பிரகாசம், .அன்பழகன், தலைமைக்கழக பேச்சாளர் அப்துல் மஜீத், மாவட்ட பிரதிநிதிகள் கோ.மதிவாணன், பாண்டியன், கோவி.அறிவுமணி நிர்வாகிகள் ஆர்.இளங்கோவன், தென்னங்குடி கருப்பையன், விளங்குளம் வி.கே.முத்தையா, நகர அவைத்தலைவர் வீராசாமி, பேரூராட்சி துணைத்தலைவர் பரிமளா, கவுன்சிலர்கள் ரெங்கேஸ்வரி நீலகண்டன், பழனியப்பன், குமணன், மணி ரவி, இந்திரா சீனிவாசன் உள்ளிட்ட கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் 
கலந்து கொண்டனர்.




0 comment(s) to... “பேராவூரணியில் அண்ணா பிறந்த நாள் விழா”