அதிரை அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இரத்த தான முகாம்.

Posted September 15, 2015 by Adiraivanavil in Labels:
அதிரை அருகே உள்ள புதுப்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
        முகாமிற்கு அமைப்பின்  தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சம்பை ஹெச்.சாதிக் பாட்சா தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் அதிரை ராஜிக் முகமது, கிளைத் தலைவர் ஹபீப் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் ஹக்கீம் வரவேற்றார்.
             புதுப்பட்டினம் அபு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் துல்கருணை சிறப்பு விருந்தினராக பங்கேற்று இரத்த தான முகாமினை தொடங்கி வைத்தார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர்கள் குருதிக் கொடையாளர்களிடம் இருந்து 40 யூனிட் இரத்தத்தை தானமாக பெற்றனர்
             கிளை நிர்வாகிகள் முகமது உசேன், ஜியாவுதீன், உமர், பாவா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கிளை பொருளாளர் ஜமால் முகமது நன்றி கூறினார் 



0 comment(s) to... “அதிரை அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இரத்த தான முகாம்.”