முத்துப்பேட்டை அருகே குடிக்க பணம் தராததால் குடிசைக்கு தீ வைப்பு

Posted October 01, 2014 by Adiraivanavil in Labels:


முத்துப்பேட்டை அருகே குடிக்க பணம் தராததால், குடிசை க்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூரை சேர்ந்த உத்திராபதி மனைவி மல்லீஸ்வரி(45). இவரது கொழுந்தன் சிவமூர்த்தி(50). இவருக்கு இன் னும் திருமணம் ஆகவில்லை. மேலும் இவருக்கு குடிப்பழக்கமும் உண்டு.நேற்றுமுன்தினம் இரவு குடிப்பதற்கு
பணம் தரும்படி சிவமூர்த்தி, மல்லீஸ்வரியிடம் கேட்டார். அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சிவமூர்த்தி மல்லீஸ்வரியின் கூரை வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடி னார். இதில் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. சேத மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம்.இது குறித்து மல்லீஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்கு பதிந்து சிவமூர்த்தியை கைது செய்தார்.கொட்டகை எரிந்து சாம்பல்: முத்துப்பேட்டை ஆசாத் நகரை சேர்ந்தவர் முகமது சேக் தாவூத் மனைவி ஆயிஷா அம்மாள்(65). இவரது வீட்டையொட்டி உள்ள கூரை கொட்டகையில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து மளமளவென பற்றி எரிந்தது.

முத்துப்பேட்டை தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைப்பதற்குள் கொட்டகை முழு வதும் எரிந்து சாம்பலானது. சேத மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம். முத்துப்ஙபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்கு பதிந்து கொட்டகையில் தீப்பிடிக்க காரணம் என்ன, தானாகவே பிடித்ததா அல்லது மர்ம நபர்கள் வைத்தார்களா என விசாரணை நடத்தி வருகிறார்.நன்றிதினகரன்


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே குடிக்க பணம் தராததால் குடிசைக்கு தீ வைப்பு”