முத்துப்பேட்டையை அடுத்து அதிமுகவினர் 4 பேர் தீக்குளிக்க முயற்சி
Posted October 08, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை,அக்.8–
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலு (வயது45). கார் டிரைவராக வேலை பார்த்து வரும் இவர் அ.தி.மு.க. வார்டு செயலாளராகவும் உள்ளார். பாலு மற்றும் முத்துப்பேட்டையை அடுத்த ஆலங்காட்டை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், கூட்டுறவு சங்க இயக்குனருமான பாலசுப்பிரமணியன் (50), ஆலங்காட்டைச் சேர்ந்த
அ.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சக்திவேல் (35), கோவிலூரைச் சேர்ந்த அ.தி.மு.க. வார்டு செயலாளர் சங்கரன் (50) ஆகிய 4 பேரும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்காததால் விரக்தி அடைந்தனர்.
இந்த நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்துக்கு ஒன்றாக வந்த பாலு உள்பட அ.தி.மு.க. பிரமுகர்கள் 4 பேரும், அலுவலக வாசலில் நின்று கொண்டு திடீரென உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கூச்சல் போட்டு, போலீசாரை அழைத்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் ஓடி வந்து 4 பேரும் உடலில் தீ வைப்பதற்கு முன்பாக தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து மயக்கம் அடைந்த 4 பேரும் முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 பேரும் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நன்றி மாலைமலர்
0 comment(s) to... “முத்துப்பேட்டையை அடுத்து அதிமுகவினர் 4 பேர் தீக்குளிக்க முயற்சி”