பட்டுக்கோட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு சாவு- போலீஸ் விசாரணை

Posted October 01, 2014 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை தாலுகா கன்னியாகுறிச்சி ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் ராமு. இவருடைய மனைவி சிவகாமி (வயது 24). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை வீட்டிற்குள் சிவகாமி தூக்குப்
போட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தாக தெரிகிறது. இதுகுறித்து சிவகாமியின் தந்தை வாசுதேவன் மதுக்கூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி சம்பவயிடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிவகாமிக்கு திருமணமாகி 4ஆண்டுகள் ஆவதால் அவர் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்று பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் அரங்கநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.நன்றி தினத்தந்தி


0 comment(s) to... “பட்டுக்கோட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு சாவு- போலீஸ் விசாரணை”