அதிரை கடலில் மருத்துவகுணமுல்ல தாளஞ்சுறா மீன்கள் வரத்து அதிகரிப்பு -(படங்கள்இணைப்பு)
Posted October 26, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மருத்துவகுணம் கொண்ட தாளஞ்சுறா மீன்கள் தற்போது மீனவர்கள் வலையில் அதிகம் அகப்படுகின்றன. சுறா மீன்களின் பல வகை உண்டு அதாவது தாளஞ்சுறா பால்சுறா கடிசுறா குண்டையன்சுறா கொம்பஞ்சுறா ஆகிய வகைகள் உண்டு. இதில் கடிசுறா பெரிதாக இருக்கும் இந்தவகை சுறாவும் மற்றும் குண்டையன்சுறா கொம்பஞ்சுறா ஆகியவை இந்திய கடற்பகுதியில் கிடைப்பதில்லை. பால்சுறா மற்றும தாளஞ்சுறா ஆகியவை மட்டும் தஞ்சை கடற்பகுதியான அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் புதுப்பட்டினம் மல்லிப்பட்டினம் மற்றும் அண்ணாநகர் புதுத்தெரு வரையிலான கடற்பகுதியில் பிடிப்படுகின்றன இதில் தற்போது தாளஞ்சுறா அதிக அளவில் கிடைக்கின்றன. இது பொதுவாக மழைகாலங்களில்
தான் கிடைக்கும். தற்போது மழை பெய்து வருவதால்; இந்தவகை மீன்கள் உற்பத்தியாகி மீனவர்கள் வலையில் அதிகம் பிடிபடுகின்றன. இதனையடுத்து இந்த தாளஞ்சுறா மீன்கள் மற்றமீன்களை விட கடல் தண்ணிரை விட்டு வேளியே வந்தபிறகும் எட்டு மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த மீன் மருத்துவகுணம் கொண்டதால் பொதுமக்கள் மார்கெட்டில் வாங்கிசெல்கின்றனர். இது பற்றி மீனவர்கள் கூறுகையில் தாளஞ்சுறா மீன்கள் மருத்துவகுணம் உள்ளது. இது குழந்தைபெற்ற தாய்மார்களுக்கு பால் சுரப்பதற்கும் மேலும் குடல்புண் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் ஒரு அருமையான மருந்தாக விளங்குகிறது. இது கொழுப்புச்சத்து இல்லை என்பதால் இரத்தம் அழுத்தம் உள்ளவர்களும் இதைச்சாப்பிடலாம் என்றார்கள் தொகுப்புஅதிரைவானவில்
0 comment(s) to... “அதிரை கடலில் மருத்துவகுணமுல்ல தாளஞ்சுறா மீன்கள் வரத்து அதிகரிப்பு -(படங்கள்இணைப்பு) ”