பேராவூரணி அருகே வேன் கவிழ்ந்து 11 பேர் காயம்

Posted October 12, 2014 by Adiraivanavil in Labels:
பேராவூரணி அருகே சனிக்கிழமை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்தனர். பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 18 பேர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள அழியாநிலை ஆஞ்சனேயர் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தனர்.ஆவணம் அருகே வளைவுச் சாலையில் வேன் சென்றபோது, எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 11 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி அரசு மருத்துவமனைகளில் 8 பேரும், பலத்த காயமடைந்த பட்டுக்கோட்டை சிவகொல்லை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (28), ரமா (45), முத்துலட்சுமி (45) ஆகிய மூவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும்
அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நன்றி  தின மணி 



0 comment(s) to... “பேராவூரணி அருகே வேன் கவிழ்ந்து 11 பேர் காயம்”