அதிரையில் ஈத்மிலன் கமிட்டி நடத்தும் சமுதாய நல்லிணக்க விழா
Posted October 09, 2014 by Adiraivanavil in Labels: அதிரைஈத்மிலன்
அதிராம்பட்டிணம் ஈத்மிலன் கமிட்டி சமுதாய நல்லிணக்கத்தை வலுப்படுப்பத்தும் நோக்கில் சென்ற ஆண்டு முதல் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் அதிராம்பட்டினம் பவித்ரா திருமண மண்டபத்தில் 12.10.2014 அன்று காலை 10.30 மணியளவில் துவங்க உள்ளது. இதில்
அனைத்து சமுதாய மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினம் உறபீப் முகம்மது இஸ்லாம் பற்றிய சந்தேகளுக்கு பதில் அளிக்கிறார். சிறப்பு விருந்தினராக சென்னை உதவி அமர்வு நீதிபதி இராமநாதன் கலந்து கொள்கிறார் இந்நிகழ்ச்சி சென்ற வருடம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிட்த்தக்கது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை அதிரை ஈத்மிலன் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
0 comment(s) to... “அதிரையில் ஈத்மிலன் கமிட்டி நடத்தும் சமுதாய நல்லிணக்க விழா”