முத்துப்பேட்டை அருகே தேக்குமரம் வெட்டி கடத்திய 3 பேர் கைது
Posted October 18, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை பகுதியில் வனத்துறை பகுதியில் தேக்குமரம் வெட்டி கடத்திய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான ஏராளமான தேக்கு மரங்கள் உள்ளது. நாச்சிக்குளம் பகுதியில் தேக்கு மரங்களை வெட்டி கடத்தி வருவதாகவும், அதே பகுதியில் உள்ள ஒரு குளத்தில் வெட்டப்பட்ட தேக்கு மரங்களை பதுக்கி வைத்திருப்பாகவும் முத்துப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதனையடுத்து வனத்துறை ரேஞ்சர் ராதாகிருஷ்ணன், பாரஸ்ட் அயுப் கான் ஆகியோரது தலைமையில் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட நாச்சிக்குளம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது தேக்கு மரங்ககள வெட்டி கடத்திக் கொண்டிருந்த மாதவன்(25), விஜயகுமார்(33), ராஜேந்திரன்(35) ஆகியோரை வனத்துறையினர் பிடித்து கைது செய்தனர். இவர்கள் மூவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. தப்பி ஓடிய முக்கிய குற்றவாளியான ரவி, ரமேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். கைதானவர்களிடமிருந்து கும்பலிடமிருந்து தேக்கு மரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.நன்றி தினகரன்
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே தேக்குமரம் வெட்டி கடத்திய 3 பேர் கைது”