பட்டுக்கோட்டையில் வீட்டு கதவை உடைத்து 6 பவுன் நகை கொள்ளை

Posted October 09, 2014 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து 6 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பட்டுக்கோட்டை கரிக்காடு பாரதிசாலை வள்ளலார் நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (60). இவர் கடந்த 6ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதாக விஜயலட்சுமியின் தம்பி பாரதிசாலையில் உள்ள முருகேசனுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தனது அக்கா விஜயலட்சுமிக்கு
முருகேசன் தகவல் தெரிவித்தார். விஜயலட்சுமி ஊரிலிருந்து வீட்டுக்கு வந்து பார்க்கையில் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர கிரைம் போலீசில் விஜயலட்சுமி தம்பி முருகேசன் (45) நேற்று புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.நன்றி தினகரன் 


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் வீட்டு கதவை உடைத்து 6 பவுன் நகை கொள்ளை”