பட்டுக்கோட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் திருடிய 3 பேர் கைது

Posted October 20, 2014 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை நகரிலும், சுற்றுப்புற பகுதிகளிலும், தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர்கள் அமிர்தலிங்கம், ராஜசேகர் மற்றும் ஏட்டுகள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி திருச்சியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 42), பட்டுக்கோட்டை நைனா முகமது (40), சேதுபாவாசத்திரம் சங்கர் (37) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் பட்டுக்கோட்டையை சேர்ந்த விஜயலெட்சுமி என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து
ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களையும், இரண்டாம்புளிக்காடு கிராமத்தில் வளர்மதி என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளையும் பறித்துச் சென்றதும், அதிராம்பட்டினத்தில் சேகர், ராதாகிருஷ்ணன் ஆகியோரை தாக்கி கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது. பிடிபட்ட நாகராஜ், நைனாமுகமது, சங்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் வெள்ளி நகைகளை கைப்பற்றினர். மேலும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.நன்றி தின தந்தி 


0 comment(s) to... “பட்டுக்கோட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் திருடிய 3 பேர் கைது”