பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற உண்ணாவிரத போராட்டம்

Posted October 03, 2014 by Adiraivanavil in Labels:

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு சனிக்கிழமை வெளியானது. இதில் அம்மாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையுடன் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து
தீர்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பல இடங்களில் கடையடைப்பு ,உண்ணாவிரதம் ,அமைதி ஊர்வலம் போன்றவை நடைபெற்று வருகிறது .இதனை அடுத்து இன்று காலை பட்டுகோட்டையில் தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர் .



இந்த உண்ணாவிரத்ததில் அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி தலைமையில் பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு, நகர செயலாளர் பாரதி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை நகர தலைவர் குமார், நகர செயலாளர் பாண்டியராஜன், அனி சேரா ஓட்டுநர் மாவட்ட தலைவர் பாஸ்கர், முன்னாள் நகரசெயலாளர் விவேகானந்தன் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றம் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிரையை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.newsஅதிரை பிறை


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற உண்ணாவிரத போராட்டம்”