பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள் சுவரில் மோதி விபத்து: இளைஞர் சாவு

Posted October 25, 2014 by Adiraivanavil in Labels:
பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சுற்றுச்சுவர் மீது மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
பேராவூரணி அருகேயுள்ள ஆவணத்தை சேர்ந்தவர் திருச்செல்வம். இவரது உறவினர் புதுக்கோட்டை மாவட்டம் கே. ராசியமங்கலத்தைச் சேர்ந்த மதி (30). இவர்கள்
இருவரும் மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்கிழமை சென்றுள்ளனர். வாகனத்தை திருச்செல்வம் ஓட்டினார். ஆவணம்
ஐஓபி அருகேயுள்ள திருப்பத்தில் மோட்டார் சைக்கிளை
திருப்பியபோது நிலைதடுமாறி எதிரேயுள்ள கொடிக்கம்பத்தில் மோதி சுற்றுச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த மதி
தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  பலத்த காயமடைந்த திருச்செல்வம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து
திருச்சிற்றம்பலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.நன்றி தினமணி 


0 comment(s) to... “பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள் சுவரில் மோதி விபத்து: இளைஞர் சாவு”