அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் உள்ள நீர்நிலைகள் நிரப்புவதற்க்கு நசுவினி ஆற்றில் இருந்து தண்ணீரை பம்பிங் மூலம் கொண்டுவதற்கான பணிகள் கடந்த சில வாரங்களாக அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்றுவந்தன இந்நிலையில் இப்பணிகளை பார்வையிடுவதற்க்குஅதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் செயல்படுத்தி வரும் 'பம்பிங் ஸ்கீம்' திட்டம் குறித்து ஆய்வை மேற்கொள்வதற்காக தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையன் இன்று
காலை வருகை தந்தார். அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு சென்று ஆய்வை மேற்கொண்டார். அதிராம்பட்டினம்
சுற்று வட்டார பகுதியின் வரைபடத்தை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து இந்த பம்பிங் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டால் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளின் மக்கள் பலன் பெருவார்கள் இதனையடுத்து
ஆய்வின் போது பொதுப்பணி துறை அலுவலர்கள், பேரூராட்சி துறை அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள்பேரூராட்சி தலைவர் அஸ்லாம் பேரூராட்சி துணைதலைவர் பிச்சை 3வது வார்டு கவுன்சிலர் சிவகுமார் மற்றும் உதயகுமார் காளிதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்