பட்டுக்கோட்டையில் ஊராட்சித் தலைவரிடம் ரூ. 4 லட்சம் பறித்த 4 பேரில் ஒருவர் கைது
Posted October 18, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டையில் ஊராட்சித் தலைவரிடம் ரூ. 4 லட்சத்தை திருடிச் சென்ற 4 பேரில் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை ஒன்றியம், அணைக்காடு ஊராட்சித் தலைவர் டி. சுதாதரன் (45).
இவர் கடந்த 24-ம் தேதி பட்டுக்கோட்டை பெரிய தெருவிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குச் சென்று 2 காசோலைகளைக் கொடுத்து, ரூ. 3.99 லட்சம் பணம் பெற்றுள்ளார். பின்னர் பணத்தை பையில் வைத்து எடுத்துக் கொண்டு, வங்கி வாசலில் நிறுத்தியிருந்த தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த ஒருவர் தரையில் கிடந்த மூன்று 10 ரூபாய் நோட்டுகளைக் காட்டி உங்கள் பணம்
கீழே கிடக்கிறது என்று கூறினாராம். அதை எடுக்க சுதாதரன் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே இறங்கியுள்ளார். அப்போது, அந்த நபர் இரு சக்கர வாகனத்தில் ரூ. 3.99 லட்சம் இருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாராம்.
இதுகுறித்து விசாரணை நடத்திய பட்டுக்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் சம்பவம் நடந்த பகுதியிலுள்ள வணிக நிறுவனங்களின் கண்காணிப்பு கேமராவை சோதனையிட்டதில் 4 பேர் சுதாதரனிடம் பணத்தை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. அந்த 4 பேரில் 3 பேர் திருவெறும்பூர் காந்தி நகரைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் பெரம்பலூரைச் சேர்ந்த ஆர். செந்தில்குமார் (29) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் செந்தில்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்து அவரிடமிருந்து ரூ. 2 லட்சத்தை மீட்டனர். தலைமைறைவாகவுள்ள எஞ்சிய 3 பேரை தேடி வருகின்றனர்.நன்றி தினமணி
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் ஊராட்சித் தலைவரிடம் ரூ. 4 லட்சம் பறித்த 4 பேரில் ஒருவர் கைது”