குடிமகளின் திருவிளையாடல்.... கள்ளச்சாராயம் கடத்தல்.....

Posted October 21, 2014 by Adiraivanavil in Labels:

முத்துப்பேட்டை அருகே பஸ்சில் ஸ்பிரிட் கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் அரசு பேருந்தில் பெண் ஒருவர் ஸ்பிரிட் கடத்தி வருவதாக திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன்பேரில் எடையூர் சிறப்பு எஸ்ஐ வேதரத்தினம், தலைமை காவலர் முத்துகிருஷ்ணன், தனி பிரிவு காவலர் பாஸ்கர் ஆகியோர் எடையூர் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள சாலையில் வந்து கொண்டிருந்த சம்மந்தப்பட்ட அரசு பேருந்தை மறித்து சோதனை நடத்தினர். 
பஸ்சில் பயணித்த ஒரு பெண்ணிடம் 8 பாலிதின் பாக்கெட்டுகளில் 80 லிட்டர் ஸ்பிரிட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் நாகப்பட்டினம் அடுத்த வெளிபாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி முனியம்மாள்(40) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.நன்றி தினகரன் 


0 comment(s) to... “குடிமகளின் திருவிளையாடல்.... கள்ளச்சாராயம் கடத்தல்.....”