அதிராம்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அரசின் கவனத்திற்கு செல்லுமா?

Posted October 07, 2014 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளி சுமார் 1921ஆம் ஆண்டு தொடக்க பள்ளியாக தொடங்கபட்டு படிபடியாக நடுநிலை பள்ளியாக மாறி பின்னர் 1982-1983 ஆம்உயர்நிலைபள்ளியாக தரம் உயர்ந்து தன்னுடைய சிறப்புமிக்க பணியை செய்து வருகிறது அதிராம்பட்டினம் அதனைசுற்றிவுள்ள 15 -க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த அனைத்து மாணவிகளும் பத்தாம்வகுப்பு வரை கல்வி கற்பதற்க்கு ஏதுவாக உள்ள இப்பள்ளியானது சரியான நேரத்தில் அதிராம்பட்டினத்தை சுற்றிவுள்ள கிராமத்திலிருந்து
15 நிமிடத்தில் பள்ளியைவந்தடைய போதுமான பேரூந்து வசதியுடன் பேரூந்துநிலையத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது சுமார் 35 வருடங்களாக உயர்நிலைபள்ளியாகவே செயல்படுகிறது அதை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த போதுமான இடவசதி இல்லாதகாரணத்தினால் இப்பள்ளியானது தன்னை மேலும் வளர்த்துகொள்ள முடியாமல் தத்தளிக்கிறது கடந்தகல்விஆண்டில் 2013-2014ல் பத்தாம்வகுப்பில் 134 மாணவிகள் கல்விபயின்று 98 சதவிகித தேர்ச்iசியை பெற்றனர் கடந்த கல்விஆண்டில் அப்பள்ளியில் பத்தாம்வகுப்பில் 484மதிப்பெண் எடுத்த மாணவி தனியார் சுயநிதி பள்ளியில் தன்னுடைய மேல்நிலை கல்வியை பயின்று வருகிறார் இப்பள்ளியில் தேர்ச்சி பெற்ற பலர் மேல்நிலை கல்வியை பெறவேண்டும் என்றால் அதிராம்பட்டினத்திலிருந்து 6 கீ,மீ தொலைவில் உள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைபள்ளியிலோ அல்லது 12 கீ,மீ தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியையே நம்பிவுள்ளனர் சுயநிதி தனியார்மேல்நிலைப்பள்ளி ஒன்று அதிராம்பட்டினத்தில் உள்ளது அப்பள்ளியில் வரையறுக்கப்படும் கல்வி கட்டணத்தை பல ஏழை மாணவிகளால் செலுத்த முடியாத நிலையில் அம் மாணவிகள் தன்னுடைய மேல்நிலை கல்வியை இழந்துவிடும் அவலநிலை ஏற்படுகிறது  ஒருகல்விஆண்டில் தேர்ச்சி பெறும் மொத்த மாணவிகளில் 10 சதவீத மாணவிகள் தன்னுடைய மேல்நிலைகல்வி யை இழக்க நேரிடுகிறது மேல்நிலைகல்வி யை தொடரமுடியாமல் போவதற்கு பல காரணங்களை எடுத்து கொள்ளலாம் . ஆனால் சரியான இடத்தில் போதுமான பேரூந்து வசதியுடன் கூடிய அரசு உயர்நிலை பள்ளி யை மேல்நிலைப்பள்ளி ஆக உயர்த்தினால் பல எழை மாணவிகளின் மேல்நிலைகல்ல்வி பாதிக்கபடாத வண்ணம் இடை நிறுத்தம் இல்லாமல் மேல்நிலைகல்வியை உறுதி செய்யமுடியும்  பெண்களை அதிக தூரம் பேரூந்துகளில் அனுப்பி படிக்க வைக்க பல பெற்றோர்கள் தயங்குகின்றனர் இதனால் மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கபடுகிறது ராஜாமடம் பட்டுக்கோட்டை போன்ற அரசு பள்ளிகளில் கல்வி பயில செல்ல போதுமான பேரூந்து வசதி இல்லை அவ்வாறு செல்ல வேண்டுமெனில் பள்ளி நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு இரண்டு மூன்று பேரூந்துகள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது அப்பள்ளி இன் கல்வி வளர்ச்சி குழுத் தலைவரை தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டதற்கு உதயகுமார் எம் .சி .,அவர்கள் இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளி ஆக மாற்ற அதிகாரிகளை அணுகியதை கூறினர் .இடபற்றகுறை ஆல் அப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக உயர்த்த வாய்ப்பு இல்லை என கூறிவிட்டனர் ஒரு  உயர்நிலை பள்ளி மேல்நிலைப்பள்ளியாக மாற 2 ஏக்கர் இடம் வேண்டும் என்ற விதி யை காரணமாக உள்ளது மேலும் அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்கழக தலைவரும் பேரூராட்சி மன்ற துனைதலைவரும் அதிமுக நகர செயலாளர்மான பிச்சை அவருகளும் அப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மற்ற கல்வித்துறைக்கு வேண்டுகோள் வைத்துள்ளதாக கூறினார் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு பின்புறம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  உள்ளது அதன் அருகில் 30 மீட்டர் தொலைவில் மற்றும் ஒரு பள்ளி உள்ளது இந்த இரண்டு பள்ளிகளுக்கும் பொதுமான மாணவர்கள் இல்லை என்பது  நிதர்சனமான உண்மை இரண்டு தொடக்கப்பள்ளியையும் ஒன்றகசேர்த்தால் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைபள்ளயாக மாற்ற பொதுமான இடம் கிடைத்துவிடும் இதை அவ்வாறு செய்ய மாவட்ட அளவிலான கல்வித்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை இதை பள்ளி கல்வித்துறை அமைச்சகம் மட்டு செய்யமுடியும் மேல்நிலைகல்வியை உறுதிசெய்யுமா பள்ளிகல்வித்துறை அமைச்சகம்? அதிரைவானவில் செய்திக்காகஅறிவானந்த் 


0 comment(s) to... “அதிராம்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அரசின் கவனத்திற்கு செல்லுமா?”