முத்துப்பேட்டை அருகே வாலிபர் மர்ம சாவு
Posted October 16, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை, அக். 16–
முத்துப்பேட்டை அருகே உள்ள செம்பதவன்காடு ஊமக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கண்ணதாசன் (24). கூலித் தொழிலாளி.
இவர் நேற்று இரவு 7 மணியளவில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். திடீரென வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை கண்ணதாசன் அண்ணி வளர்மதி பார்த்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.இது குறித்து
முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மர்மமான முறையில் இறந்த கண்ணதாசனுக்கு சத்யா என்ற மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.நன்றி மாலைமலர் 0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே வாலிபர் மர்ம சாவு”