கடைமடைப் பகுதிக்கு நீர் கோரி ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டையில்

Posted October 10, 2014 by Adiraivanavil in Labels:
கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி பட்டுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் விவசாயிகள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். கரம்பக்காடு ஆறுமுகம், துவரங்குறிச்சி நாடிமுத்து, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் நாதன், பேராவூரணி கருணாமூர்த்தி, மல்லிப்பட்டினம் கமால்பாட்சா, ஒரத்தநாடு கருணாநிதி, திருவோணம்
முத்துக்கிருஷ்ணன், சேதுபாவாசத்திரம் பிச்சைமுத்து, தம்பிக்கோட்டை வேதநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பட்டுக்கோட்டை, மதுக்கூர், ஒரத்தநாடு, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவோணம் ஆகிய 6 ஒன்றிய கடைமடை பகுதி வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கோஷமிட்டனர்.நன்றி தினமணி 


0 comment(s) to... “கடைமடைப் பகுதிக்கு நீர் கோரி ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டையில்”