பட்டுக்கோட்டையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Posted October 29, 2014 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டையில் பால்விலை உயர்வு, மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் விவசாயிகளுக்கு உடனடியாக போதிய நிவாரண உதவிகள் வழங்க வலியுறுத்தியும் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.பி.யும் தி.மு.க தேர்தல் பணிச்
செயலாளருமான எல்.கணேசன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ப.பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் சீனி.அண்ணாதுரை, தலைமை கழக பேச்சாளர் ந.மணிமுத்து, ஒன்றிய செயலாளர்கள், மதுக்கூர் வீ.கோவிந்தராசு, பேராவூரணி சுப.சேகர், சேதுபாவாசத்திரம் மு.கி.முத்துமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கா.அண்ணாதுரை, மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் அ.அப்துல்சமது, மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், மாவட்ட பொருளாளர் பஷீர் அகமது, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பி.என்.ஆர்.பிரகாஷ், மதுக்கூர் நகர செயலாளர் டி.ஏ.இராஜகோபாலன், நகரசபை முன்னாள் தலைவர் சீனி.இளங்கோ, அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் அஸ்லாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நன்றி தினத்தந்தி 


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்”