முத்துப்பேட்டை அருகே 4 கிராம விவசாயிகள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
Posted October 12, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அருகே 4 கிராம விவ சாயிகள் சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.சாலை மறியல் திருவாரூர் மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுடி நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடி பணிகளில் விவ சாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் முத்துப் பேட்டை அருகே வயல் களுக்குள் தண்ணீர்புகுந்து, சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.பயிர்கள் மூழ்கினமுத்துப்பேட்டை அருகே வடசங்கேந்தி, மருதாவனம், மாங்குடி, கடுவெளி ஆகிய 4 கிராமங்கள் அடுத்தடுத்து அமைந்து உள்ளன. இந்த கிராமங்களின் விவசாய பாச னத்துக்கு கோரையாற்றின் கிளை ஆறான மரைக்கா கோரையாறு மூலம் தண்ணீர் கிடைக்கிறது. இதே மரைக்கா கோரையாற்றின் மதகு ஒன்று இடும்பாவனம் பகுதியில் உள்ளது.இடும்பாவனம் மரைக்கா கோரையாற்று மதகு கடந்த சில நாட்களாக மூடிக் கிடந் ததால் தண்ணீர் ஆற்றில் தொடர்ந்து செல்ல முடியாமல் வடசங்கேந்தி, மருதாவனம், மாங்குடி, கடுவெளி ஆகிய கிராமங்களில் சம்பா பயிர் நடப்பட்டிருந்த வயல்களுக் குள் புகுந்தது. இதனால் பயிர்கள் நீரில் மூழ்கின.இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நேற்று திருத்துறைப்பூண்டி - பட்டுக் கோட்டை சாலை சங்கேந் தியில் மறியல் செய்தனர்.
அப்போது மதகை திறந்து வயல்களில் இருந்து தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தகவல் தெரிவித்தும் நட வடிக்கை எடுக்காத பொதுப் பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும் விவசாயிகள் கோஷம் எழுப்பினார்கள்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி பொதுப் பணித்துறை பாசன பிரிவு பொறியாளர் லோக நாதன், எடையூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகன், சப்-இன்ஸ் பெக்டர் வேதரெத்தினம், ஒன் றியக்குழு றுப்பினர் நாகராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையன் ஆகி யோர் பஸ் மறியல் செய்த விவசாயிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
சமாதான பேச்சுவார்த்தை யில் வயல் களில் இருந்து தண் ணீர் வெளியேற வசதியாக இடும்பாவனம் மரைக்கா கோரையாற்று மதகு உடன டியாக திறக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதன்பேரில் மறியலை விவசாயிகள் கைவிட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி - பட்டுக் கோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நன்றி தினத்தந்தி
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே 4 கிராம விவசாயிகள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு”