முத்துப்பேட்டைஅருகே வீட்டுக்கு வர மகன் மறுப்பு : விரக்தியில் தந்தை தற்கொலை
Posted October 11, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை எம்.கே. நகரை சேர்ந்தவர் ராமையன் (58). விவசாயி. இவரது மகன் செந்தில் (38). இறால் பண்ணை தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் உள்ளது.கடந்த 8ம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள நல்ல மாணிக்க விநாயகர் கோயில் அருகே நடந்து வந்த செந் திலை ஒரு கும்பல் தாக்கியது. அவர் தப்பி ஓடியும் விடா மல் விரட்டி விரட்டி தாக்கி னர். அவர்களிடம் இருந்து தப்பிய செந்தில் மன்னார்குடி தாலுகா நொச்சியூரில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்று விட்டார்.தகவலறிந்த ராமையன் நேற்றுமுன்தினம் அங்கு சென்று மகனை தன்னுடன் வீட்டிற்கு வரும்படி அழைத் தார். அங்கு வந்தால் தன் னை
தாக்குவார்கள் என்று கூறி செந்தில், ராமையனு டன் செல்ல மறுத்து விட் டார். இதனால் மனமுடை ந்த நிலையில் வீடு திரும்பிய ராமையன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். நன்றி தினகரன் 0 comment(s) to... “முத்துப்பேட்டைஅருகே வீட்டுக்கு வர மகன் மறுப்பு : விரக்தியில் தந்தை தற்கொலை”