அதிரையில் மீனவர்கள் நடத்திய கண்டன பேரணி -படங்கள் இணைப்பு

Posted October 01, 2014 by Adiraivanavil in Labels: ,
 அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு அளித்த தீர்ப்பை எதிர்த்து அதிரை ஏரிபுறக்கரை, கரையூர் தெரு, கீழத்தோட்டம் ஆகிய கிராமங்களின் மீனவர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர்.ஏரிபுறக்கரை கிராம மீனவ கூட்டுறவு சங்க தலைவர் முருகேசன் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகிலிருந்து புறப்பட்ட பேரணி பள்ளி சாலை வழியாக சென்று இறுதியில் கல்லூரி முக்கத்திற்கு வந்தடைந்தது.இதையடுத்து கண்டன
உரையை அதிமுக அதிரை நகர செயலாளர் பிச்சை நிகழ்த்தினார். பேரணியில் திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணிய சுவாமி ஆகியோருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பட்டன. இதில் மீனவ கிராம பொதுமக்கள் மற்றும் அதிமுகனர் கலந்துகொண்டனர்.











0 comment(s) to... “அதிரையில் மீனவர்கள் நடத்திய கண்டன பேரணி -படங்கள் இணைப்பு ”