அதிரை கடற்பகுதியில் வெள்ளிமீன்கள் சீசன் துவக்கம் போதியவிலையில்லததால் மீனவர்கள் கவலை
Posted January 04, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கடல்பகுதியில் வெள்ளிமீன்கள் சீசன் துவங்கியுள்ளது இருந்தும் போதியவிலை இல்லாததால் மீனவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர் இந்த வெள்ளிமீன்களுக்கு வெள்ளைமீன்கள் தேசமின்கள் என்ற பெயரும் உண்டு இது பத்தியம் உள்ளவர்களும் சாப்பிடலாம் என்பதால் இந்த மீன்களை பொதுமக்கள் விரும்பி வாங்குவர் இது ஆந்திரா கேரளா ஆகிய மாநிலங்களுக்கு
ஏற்றுமதி செய்யப்படுகிறது இது பெரும்பாலும் காட்டாறு தண்ணீர் மற்றும் மழை நீர் கடலில் கலக்குகின்ற பகுதியில் இனப்பெருக்கமாகிறது இந்தவகையில் கோடியக்கரை முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் மற்றும் கட்டுமாவடி வரையில் காட்டாறு தண்ணீர் கடலில் கலக்குகின்ற பகுதி என்பதால் வெள்ளி மீன்களில் உற்பத்தி இங்கு அதிகமாகிறது இது அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் தான் அதிகம் பிடிபடும் தற்போது கடலில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் தற்போது இந்த மீன்கள் அதிகம் பிடிபடுகின்றன இருந்தும் இதற்கு அதிகம் விலை இல்லாததால் கடலில் கடந்து கஷ்டப்பட்டு மீன்பிடித்துவரும் மீனவர்களை கவலையடைச்செய்துள்ளது இது பற்றி அதிராம்பட்டினம் மீனவர்கள் கூறுகையில் வெள்ளி மீன்கள் இல்லாமல் மற்ற மின்களின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் ஆனால் வெள்ளிமீன்களுக்கு விலை ஏற்றமில்லாமல் பத்து வருடங்களுக்கு முன் என்ன விலை இருந்ததோ அதே விலை இன்னும் இருந்து வருகிறது என்று வருத்தத்துடன் கூறுகின்றனர்
0 comment(s) to... “அதிரை கடற்பகுதியில் வெள்ளிமீன்கள் சீசன் துவக்கம் போதியவிலையில்லததால் மீனவர்கள் கவலை”