பட்டுக்கோட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கும், பொதுமக்களின் பொதுசுகா தாரத்திற்கும் இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை தங்களது சொந்த இடத்தில் வளர்க்கக்கோரி கால்நடை உரிமையாளர்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டது. மீறினால் வாகனம் மூலம் கால்நடைகளை பறிமுதல் செய்து
ஏல நடவடிக்கை மூலம் ஒப்படைக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. இதற்கு உரிய ஒப்புதலும் நகர்மன்றக் கூட்டத்தில் பெறப்பட்டது. அதனையும் மீறி பட்டுக்கோட்டை நகர எல்லைப் பகுதிகளில் சுற்றித்திரிகின்ற கால்நடைகளை அப்புறப்படுத்துவதற்கு நகராட்சி ஆணையர் அச்சயா உத்தரவிட்டார். அதன்பேரில் நக ராட்சி துப்புரவு அலுவலர் மூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், அறிவழகன், ஆரோக்கியசாமி ஆகியோர் நகரில் பொதுசுகாதாரத்திற்கு இடையூறாக சுற்றித் திரிந்த சுமார் 12 கால்நடைகளை பிடித்து கால் நடை ஒன் றுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் அச்சயா கூறுகையில், இனிவரும் காலங்களில் இதுபோன்ற விதிமுறைகளை மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய அபராதத் தொகை விதிப்பதுடன் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடுமை யாக எச்சரிக்கை செய்து கால்நடைகளை விடுவிக்க உத்தரவிட்டார். பின்னர் 12 கால்நடைகளும் விடுவிக்கப்பட்டது.
நன்றி தினகரன்