முத்துப்பேட்டை கலவரத்தில் தனி ஆளாய் துணிந்து நின்று தடுத்த சப்-இன்ஸ்பெக்டர்!

Posted January 04, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை அடுத்த ஜம்புவானோடை தர்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 150 -க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தர்காவை தாக்குதல் நடத்தியபோது முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தனி ஆளாய் நின்று உயிரை பெரிது படுத்தாமல் துணிந்து திருப்பி தாக்கி வன்முறை கும்பலை சேர்ந்த அனைவரையும் திருப்பி விரட்டியடித்தார். அதனால் மேலும் பெரிய சம்பவங்கள் தடுக்கப்பட்டது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர.; இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் கூறுகையில் பாதுக்காப்பு கவசங்கள் என்னிடம் இருந்திருத்தல் இந்த சம்பவங்கள்
கூட நடந்திருக்காது என்றார். 


நன்றி 
படம்செய்தி      
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டை கலவரத்தில் தனி ஆளாய் துணிந்து நின்று தடுத்த சப்-இன்ஸ்பெக்டர்!”