முத்துப்பேட்டையில் வீட்டுக்குள் 20 நாய்கள் புகுந்ததால் பரபரப்பு

Posted January 05, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை ஆஸ்பத்திரி தெருவில் உள்ள வீரமணி என்பவரது வீட்டு கதவு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு திறந்திருந்தது. அப்போது அந்த வீட்டுக்கு 20க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் புகுந்தது. அந்த நாய்களை விரட்டி பார்த்தும் முடியவில்லை. பின்னர் அந்த நாய்கள் வீட்டு மொட்டை மாடிக்கு சென்றுவிட்டது. இதையடுத்து அந்த வீட்டின் கேட்டை பூட்டி சிறை
வைத்தனர். பின்னர் இரவு முழுவதும் தூங்காமல் நேற்று காலையில் பேரூராட்சிக்கு தகவல் கொடுத்தனர். பலமணி நேரமாகியும் பேரூராட்சி நிர்வாகத்தினர் வரவில்லை. இதனால் சிறை வைக்கப்பட்ட நாய்களை அப்பகுதி மக்கள் திறந்து விட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வீரமணி கூறுகையில், தெருக்களில் சுற்றி திரியும் நாய்களால் நாங்கள் அவதிப்படுகிறோம். பேரூராட்சிக்கு தகவல் கொடுத்தும் யாரும் வரவில்லை. நாய்களை பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நன்றி தினகரன்



0 comment(s) to... “முத்துப்பேட்டையில் வீட்டுக்குள் 20 நாய்கள் புகுந்ததால் பரபரப்பு”