அதிராம்பட்டினம் கடல் பகுதியில் மூடுபனி:மீனவர்கள் கடும் அவதி
Posted January 06, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம், ஆகிய துறைமுக பகுதிகளி லிருந்து நேற்று முன்தினம் இரவு மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் வலைகளை விரி த்து மீன்கள் பிடிப்பதற்காக காத்திருந்தனர். அப்போது பனி லேசாக இருந்தது.மீன் கள் அகப்பட்டவுடன் துறை முகம் திரும்புவதற்கு
மீனவர் கள் ஆயுத்தமாக இருக்கும் போது, மூடுபனி பொழிய ஆரம்பித்தது. இதனால் மீனவர்கள் பனியில் நனைந்தனர். அருகாமையில் இருக்கும் படகுகள்கூட தெரியவில்லை. மீனவர்கள் படகுகளை வேக மாக ஓட்டாமல் மெதுவாக எந்த திசையில் செல்கிறோம் என தெரியாமல் தடுமாற்றம் அடைந்தனர்.
மீனவர் கள் ஆயுத்தமாக இருக்கும் போது, மூடுபனி பொழிய ஆரம்பித்தது. இதனால் மீனவர்கள் பனியில் நனைந்தனர். அருகாமையில் இருக்கும் படகுகள்கூட தெரியவில்லை. மீனவர்கள் படகுகளை வேக மாக ஓட்டாமல் மெதுவாக எந்த திசையில் செல்கிறோம் என தெரியாமல் தடுமாற்றம் அடைந்தனர்.
பின்னர் 3 மணி நேரம் தாமதமாக துறைமுகம் வந்தடைந்தனர். சில படகுகள் துறைமுகம் தெரியாமல் மாற்று துறைமுகத்திற்கு சென்று விட்டனர். சூரிய ஒளி வந்த பிறகு திசை மாறிய படகுகள் தங்களது துறைமுகத்திற்கு வந்தடைந்தனர்.
இதுகுறித்து மீனவர் சங்கர் கூறுகையில், ஒரு வாரமாக அதிராம்பட்டினம் கடல் பகுதியில் பனி இல்லை. இதனால் பனி பொழிவு இருக்காது என நினைத்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென்று மூடுபனி ஏற்பட்டு கடல் முழுவதும் புகை மண்டலமானது. அதில் நனைந்து விட்டோம். பின்னர் மெதுவாக படகை செலுத்தி துறைமுகம் வந்தடைந்தோம் என்றார்.
0 comment(s) to... “அதிராம்பட்டினம் கடல் பகுதியில் மூடுபனி:மீனவர்கள் கடும் அவதி”