இன்ஜினியர், கொத்தனாருக்கு குவைத்தில் வேலை வாய்ப்பு: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

Posted January 02, 2015 by Adiraivanavil in Labels:

குவைத் நாட்டில் உள்ள வேலைவாய்ப்பிற்கு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கலெக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
குவைத் நாட்டில் உள்ள இந்திய தொலைத் தொடர்புத் துறையில் பணபுரிய டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்ற சிவில் இன்ஜினியர்கள், 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் உள்ள கொத்தனார்கள் மற்றும் சமையலர்கள், 5 வருட அனுபவத்துடன் துவக்கப்பள்ளி தேர்ச்சி பெற்ற லேபர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்ற ரிக்கர்கள் மற்றும் லேபர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபத்துடன் 50 வயதிற்குட்பட்ட குவைத் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டிப்ளமோ தேர்ச்சியுடன் சிவில் பிரிவில் 5 வருட அனுபவம் பெற்ற ஆட்டோ காட் இயக்குபவர்கள் தேவைப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இருப்பிடம் மற்றும் குவைத் நாட்டின் சட்டதிட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும். 
மேற்கூறிய காலியிடங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட்,  புகைப்படம் ஆகியவற்றுடன் எண் : 42, ஆலந்தூர் சாலை, கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை32 என்ற முகவரியிலுள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு நேரிலே அல்லது ஷீனீநீக்ஷீமீsuனீ@ரீனீணீவீறீ.நீஷீனீ என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களை  04422502267, 22505886 என்ற தொலை பேசி எண்கள் மூலமாகவும் அல்லது <ஷ்ஷ்ஷ்.ஷீனீநீனீணீஸீஜீஷீஷ்க்ஷீ.நீஷீனீ> என்ற இணையதளத் திலும் தெரிந்து கொள்ள லாம் .இவ்வாறு கலெக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.



0 comment(s) to... “இன்ஜினியர், கொத்தனாருக்கு குவைத்தில் வேலை வாய்ப்பு: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு”