முத்துப்பேட்டை அருகே இலவச வேட்டி சேலை தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்!

Posted January 05, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தில் தமிழக அரசின் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு கிராம நிர்வாக அலுவலர் ரவி தலைமை வகித்தார். பயனாளிகளுக்கு தி.மு.க குன்னலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆடலரசன் இலவச வேட்டி சேலைகளை வழங்கி துவக்கி
வைத்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் கவிதா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரவணன், கூட்டுறவு சங்க தலைவர் பாரதிதாசன், ஊராட்சி ஊறுப்பினர்கள் பிச்சைமணி, ரசூலா, சத்தியமூர்த்தி உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். 

நன்றி படம்செய்தி 
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே இலவச வேட்டி சேலை தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்!”