அதிரை அருகே கணவன் திட்டியதால் தீக்குளித்து பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

Posted February 22, 2015 by Adiraivanavil in Labels:


அதிராம்பட்டினத்தை அடுத்து உள்ள புக்கரம்பை பாடுவான்கொல்லையை சேர்ந்தவர் செந்தாமரைச்செல்வன். லாரி டிரைவர். இவருடைய
மனைவி கார்த்திகா (வயது23). இவர்களுக்கு அனுசிகா (4), விருத்திகா (2) ஆகிய மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் செந்தாமரைச்செல்வன் வேலைக்காக வெளியூர் சென்றிருந்தபோது மனைவி கார்திகாவிடம் செல்போனில் குடும்ப பிரச்சினை தொடர்பாக பேசி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த கார்த்திகா உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக தெரிகிறது. இதில் உடல் கருகிய கார்த்திகாவை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கார்த்திகாவுக்கு திருமணமாகி 7 வருடங்களுக்கு குறைவாக உள்ளதால்
இது குறித்து தஞ்சாவூர் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.


0 comment(s) to... “அதிரை அருகே கணவன் திட்டியதால் தீக்குளித்து பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை”