துபாயில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா…![ படங்கள் இணைப்பு ]

Posted February 08, 2015 by Adiraivanavil in Labels:


 துபை: ரேடியோ சலாமின் பொங்கல் விழா நேற்று அல் அய்ன் – துபாய் சாலையில் இருக்கும் மர்மும் பால் பண்ணை திடலில் நடைபெற்றது. சென்ற வாரம் நடக்க வேண்டியது ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடந்தாலும் கடுங்கூட்டம் நாங்கள் கடைசி நேரத்தில் தான் பார்த்து வரலாமே என நினைத்து சென்றாலும் அப்போதே கிட்டத்தட்ட இரண்டு கி.மீ சுற்றளவுக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததது.

உள்ளே நுழைய வாழை மரங்கள் சகிதம் வரவேற்பு, திடலில் ஊரில் நடக்கும் பொங்கள் விழாவை நினைவுபடுத்து எல்லா அமைப்பும் இருந்தது.





























சுற்றிலும் கடைகள், பூ கடை முதல், வடை பஜ்ஜி வகைறா கடைகள் வரை. கச்சேரி முடிவில் சென்றாலும் இரண்டு மூன்று பாட்டு பாடினார்கள். பிறகு குழந்தைகள் கூடி பாட விழா பரிசு நிகழ்வு நடைபெற்றது. கோலப்போட்டி, பொங்கல் போட்டி உரி அடித்தல், கயிறு இழுத்தல் இன்னும் நிறைய போட்டிகள் வைத்திருக்கிறார்கள். கட்டுக்கடந்தாக மக்கள் கூட்டம்.

ஊரில் நடக்கும் கட்சேரி, பொங்கல் விழா இவைகளை தோற்கடிக்கு அளவுக்கு இருந்ததாக சொல்லலாம். ரேடியோ ஜாக்கிகள் அவர்களுக்கே உரிய பாணியில் கூட்டத்தை கலகலப்பாக்கினர். கண்காணிக்க போலிஸ் கூட அவ்வப்போது வந்து போயினர். தமிழ் மக்களின் சங்கமமாக நேற்றைய நிகழ்வு இருந்தது.

= mohaideen batcha


0 comment(s) to... “துபாயில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா…![ படங்கள் இணைப்பு ] ”