சைலேந்திரபாபு அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு காவல் நிலையத்தில் ஆய்வு

Posted February 21, 2015 by Adiraivanavil in Labels:
தமிழக கடற்கரை பகுதியில் உள்ள கடற்படை முகாம்களுக்கு கடலோர
பாதுகாப்பு குழுமம் கூடுதல் காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு சென்று மீனவர்கள் பாதுகாப்பு நலன் நாட்டின் எல்லை பாதுகாப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கை பற்றி ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
நேற்று ஆற்காட்டு தோப்புத்துறை, மல்லிப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், தொண்டி ஆகிய கடற்கரை முகாம்களுக்குச் சென்று அதிகாரிகளிடம் கூட்டு ரோந்து நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்தார். ஆலோசனை கூட்டத்தில் நாகை மாவட்டம் கடலோர பாதுகாப்பு குழுமம், கூடுதல் காவல் துறை மாவட்ட கண்காணிப்பாளர், பட்டுக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் தீபா கர்னிக்கர், பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழுமம் டி.எஸ்.பி. பீட்டர் அகஸ்தியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். கடலோர பாதுகாப்பு குழுமம் இன்ஸ்பெக்டர் சுபாஷ் சந்திரபோஸ் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் சிறப்பு உதவி ஆய்வாளர் திருவேங்கடம் உதவி ஆய்வாளர் பசுபதி சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யாத்துரை ஆகியோர் உடன் இருந்தனர். கடலோர பாதுகாப்பு குழுமம் கூடுதல் காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறிய தாவது:–
மீனவர்கள் பாதுகாப்பு நலன் கருதி கடற்படையும் கடலோர பாதுகாப்பு குழுமமும் இணைந்து கூட்டு ரோந்து மேற்கொள்வது தொடர்பாக கடற்படை முகாம்களுக்கு சென்று ஆலோசனை நடத்தி வருகின்றேன்.
சென்ற வருடம் கடலில் இயற்கை இடர்பாடுகள் மற்றும் விபத்தில் சிக்கிய 151 மீனவர்களை காப்பாற்றி உள்ளோம். மீனவர்களை இயற்கை இடர்பாடுகளிருந்து உடன் மீட்க புதிய அதிநவீன படகுகள் விரைவு படகுகள் தமிழக கடற்கரை பகுதிக்கு 20 படகுகள் வழங்க உள்ளோம். நாகை பகுதிக்கு 2 படகுகளும் தஞ்சை பகுதிக்கு 1 படகும் வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


0 comment(s) to... “ சைலேந்திரபாபு அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு காவல் நிலையத்தில் ஆய்வு”